isaifm

12/22/2011

விடை இல்லா கேள்விகள் என் மனதோடு

விடை இல்லா கேள்விகள் என் மனதோடு பல இருந்தாலும் நீ என் நினைவுகளுக்கு விடை கொடுக்கவே வேண்டுகிறேன், என்னை போல் நீயும் நின்மதி இல்லாமல் வாழ்வதை விட என்னை மறந்து நீ நலமுடன் வாழவே தினமும் வேண்டுகிறேன் இறைவனிடம் அல்ல உன்னிடம் :((((

12/21/2011

கண்ணீர் துளிர்களின் அணைப்பில் இறுதி வரைக்கும் நான்

மழை பூமியை நனைப்பதை எவராலும் தடுக்க முடியாது அது போலவே என் கண்ணீர் துளிகளை எவராலும் நிறுத்த முடியாது :((

UYIRAE UYIRAE URUKATHAE

தான் ரசிப்பதற்காக என்னை அழ வைத்தவள்

நான் அழும் போது கூட  அழகென்றாயே
அதன் அர்த்தம் இன்றல்லவா எனக்கு புரிந்தது
நீ ரசிப்பதர்க்ககவே என்னை அழவைக்கிறாய் என்று :((

12/20/2011

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி lol

செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல்

புரியாத என் வேதனை

வேடிக்கை பார்க்கும் உனக்கோ
என் வேதனை புரிவதில்லை
வேதனைப்படும் எனக்கோ
வேடிக்கை பார்க்க தெரிய வில்லை !!

ma fav song

என் வலியும் வேதனையும்

நாட்கள் பல கடந்தும் நீ நடத்திய
காதல் என்னும் நாடகத்தின்
வலியும் வேதனையும் எனக்கு
கொஞ்சம் கூட குறையவில்லை
இவை யாவும் தந்தது நீயாக
இருந்தும் உன் மேல் உண்டான
என் காதல் துளி கூட
குறையவில்லை :(((((



11/12/2011

கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே :(((

கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே
கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே
என்னை நீ வெறுத்தால்
என்னாகும் என்று
நினைத்துதான் பாரு
நெஞ்சத்தை கேளு
முள்ளில்ஆடும் பறவை நான் தானே
பறவை நானே...

(கன்னீரில்)

அம்மாவாசை இரவினிலே
நிலவது உதிப்பதில்லை
அழகற்ற என் முகத்தை
அன்றொருத்தி ஏற்க்கவில்லை

அழகை வைத்து காதலிக்க
அவளை போல பலர் உண்டு
அன்பை வைத்து காதலிக்க
என்னை போல சிலர் உண்டு

பாலைவனத்தில் சோலை எதற்கு

காளை மனதில் சோகம் எதற்கு

திரிந்திட்ட பால் குடத்தில்
வென்னை அதில் தேடாதே

ஒரு தலை ராகத்திலே
காலந்தன்னை கழிக்காதே

அழகிய மயிலே என்னை நெருங்காதே
நெருங்காதே...

உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே

காம்பை விட்டு பூ உதிர்ந்தால்
மீண்டும் அங்கே பூப்பதில்லை
காதலித்து தோல்வியென்றால்
மீண்டும் அங்கே காதல் இல்லை

காளை உன்னை காம்பு என்றால்
பெண் அவளை பூ என்பேன்
காம்பில் அவள் பூக்கவில்லை
காதல் அவள் ஏற்கவில்லை

நினைத்தது நான் நினைத்தது தான்

மறந்து விட்டால் மாற்றம் வரும்

நினைத்ததை மறப்பதற்கு
நெஞ்சத்துக்கு தெரியாதே

கண்களை மூடிக்கொண்டு
இருட்டென்று சொல்லாதே
முள்ளில் ஆடும் பறவை நான் தானே
பறவை நானே

உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே
தரை மீது ஓடம் ஓடாது மானே
நதி மீது தேரும் போகாது தேனே
மானே தேனே என்னை நெருங்காதே
நெருங்காதே...

உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
உன் வானம் அழைப்பது வீணே

9/12/2011

உன் மடி சாயவேண்டும்

அன்பே, ♥ எனது வலிகளை,
 உணர்வுகளை,
சோகங்களை
உணர்ந்து என் கண்களில்
வடியும் கண்ணீரை துடைத்து
என்னை உங்களோடு
அணைப்பீர்கள் என்ற
எண்ணத்தில் தான்
நான் இன்ன
மும் உயிர் வாழ்கின்றேன் ♥

6/17/2011

ah mizz u


காரணம் இன்றி வெறுக்கப் பட்டவன்(ள்) :((((

நான்
உயிர்த்திருக்கயிலேயே மறக்கப் பட்டவன்(ள்)
காரணம் இன்றி வெறுக்கப் பட்டவன்(ள்)
என்னை நேசிப்பவன்(ள்) என்னையே வெறுப்பவன்(ள்)
என் தனிமையை யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புபவன்(ள்)
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் தடுமாறிக் கொண்டிருப்பவ
ன்(ள்) :(((((

6/08/2011

உண்மை அன்பின் நிலைமை இது தானோ ?

கண்ணீர்

எப்போதும் மகிழ்ச்சியாய் இரு
என்று அடிக்கடி சொல்லுவாய் 
இப்போது தான் புரிகின்றது
 காலமெல்லாம் கண்ணீர்விட
என்னைத் தயார் படுத்தினாய் என்று...

காதல் எதற்காக?

காதல் எதற்காக?கண்ணீர் எதற்காக ?காத்திருப்பு எதற்கா?
கவலைகள் எதற்காக?
பிரிவுகள்தான் எதற்காக ?
பிரிவினால் வரும் வலிதான் எதற்காக?காலம்தான் பதில் சொல்லணும்!

நேசித்தால் மட்டும் போதும்

இவ் உலகில் யாரையும் எல்லைமீறி நேசித்து விடாதே....
நீ எதிர் பார்த்த அன்பு உனக்கு கிடைக்காவிட்டால்
அது போல் ஒரு துன்பத்தை நீ கடந்துருக்க மாட்டாய்...
நேசித்தால் மட்டும் போதும்............
வேறு எதையும் எதிர் பார்த்து விடாதே,,
மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே

உன் சோகம்

நீருக்குள் மீன் அழுதால் அதன் துயரம் யார் அறிவர்  உனக்குள் நீ அழுதால் உன் சோகம் யார் தான் புரிவார்

ஏனோ

ஆயிரம் உறவுகள் இருந்தும் சில உறவுகள் (நான் )அநாதையாக தவிப்பதேனோ? :( ;(

5/25/2011

ஒரு
அன்பான இதயம் ஆயிரம் அழகான முகத்திற்கு சமம்..
அழகான முகங்களை விட அன்பான
இதயங்களையே நேசிப்போம்..
 உங்களிடம் அன்பாக பேசும் பொய்யான முகங்களைவிட..
உரிமையோடு சண்டை போடும்
இதயத்தையே நேசிப்போம்..அதுவே உண்மையான
அன்பு......!!!!!!!!

5/21/2011

அன்பு


முகிலினங்கள் அலைகின்றன
முகவரிகள் தொலைந்ததனால்
சில அன்புள்ளங்கள் அலைகின்றன
இதயங்கள் தொலைந்ததனால்

5/19/2011

சொந்தங்களே சுமையானது,
சோகங்களே சுகமானது,
பந்தங்களே பகையானது,
பாசங்களும் பகல் வேசமானது,
நெருங்கிய உறவுகளும் நெருங்காது போனது, விரும்பிய உறவுகளும் விரும்பாது போனது
கனிந்த காதல் கூட கசந்து போனது..

3/03/2011

எனது காதல்


நீ என்னை விட்டு பிரிந்ததனால் !.......
இரவுக்கு நிலவை காண முடிவதில்லை ??..
உலகம் இருக்கும் வரை காதல் வாழும் என்பார்கள்!! 
ஆனால் !!?..
உலகம் அழிவடைந்த பின்னரும்.
எமது காதல் வாழும் .....
அடுத்த யுகத்திலும் உனக்காக பிறப்பேன்!!..
உனது உண்மையான அன்புக்காக.
மனிதனாக அல்லாவிட்டாலும்

ஜாதிகள் அற்ற ஒரு உசிராக ?

2/16/2011

கண்ணீர்

சிலநிமிடங்கள் தினமும்
உனக்காக
கவிதை எழுத
நேரம் ஒதுக்கினேன்
ஆனால் -நீயோ
பலநிமிடங்கள் தினமும்
எனக்காக
கண்ணீர் கொடுக்க
நேரம் ஒதுக்கினாய்

love feeling

2/08/2011

எங்கு சென்றாய்


எங்கு சென்றாய் தூரமாக..??? கண் இமைக்கும் நொடியிலும்- உன்னை காணமல் தவிக்கும் தவிப்பும்...நீ எங்கு என்ற ஏக்கமும்,.. மீண்டும் வருவாய் என்ற நம்பிக்கையும் வீணாகுமோ

உன் நினைவுகள்


அன்பே !! உன்னை என் இதயம் என்று சொல்லவா ?என் உயிர் என்று சொல்லவா ? எனக்கு என் இதயமும் உயிரும் ஒன்று தான்., என்னுள் நீ கலந்திருப்பதனால் எப்படி புரியவைப்பேன் ? புரிந்து கொள் பெண்ணே நீ துடிப்பதனால் தான் நான் உயிர் வாழ்கிறேன் !! என்று உன் நினைவுகள் இல்லையோ அமைதியாக தூங்கி கொண்டு இருப்பேன் என் கல்லறையினுள்
உன் நினைவுகளை சுமந்து கொண்டு

என் காதல்


காயங்கள் நெஞ்சம் முழுக்க
மூடும் கண்களுக்குள் கண்ணாடித் தூள்கள்
முட்கள் கொட்டி வைத்த கட்டில்
எங்கிருந்து வரும் உறக்கம்?

காதல்


ஊமையின் கனவு போல ஆனதே என் காதல்

என் காதல்


கருவறையில் இருக்கும் குழந்தை
பத்து மாதம் வரை வளரும்
என் இதயத்தில் இருக்கும் காதல்
என் இதயம் இறக்கும் வரை வளரும்