isaifm

12/31/2012

உணர்வற்ற பிணம்

மூச்சுக்கு  மூச்சு  அவர்களையே  நினைத்து  இருந்தேன்
எப்பொழுது  அவர்கள் என்னை பார்த்து
உன் தந்தைக்கு எத்தனை தாரம்  என்று கேட்டார்களோ 
அன்றே என் மூச்சு  நின்று விட்டது   
இப்பொழுது  உணர்வற்ற  வெறும்  பிணம்  தான் நான்
 இனி  அதில்  இருந்து உயிர்த்
தெழுவது கடினம் தானே ?

12/05/2012

தெரு நாய்

தெரு  நாய் வீடு வீடாக  அலைவது போல 
நானும் அலைகிறேன்  அன்பை தேடி 
தெரு நாயை  துரத்துவது போல
என்னையும் துரத்துகின்றனர்  எல்லோரும்

பாவி

அனுதாபபட்டவது  யாரும் இனி
என் மேல அன்பு வைக்கதீர்கள் 
செய்த பாவத்திற்கும்
செய்த துரோகத்திற்கும் 
நான் அனுபவித்தே  ஆகா  வேண்டும்

12/04/2012

என் வலி

மிகப் பெரிய வலிகளை
கண்டிராதவர்களால் மட்டும் தான்,
பிறரின் வலியில் இன்பம் காண முடிகிறது.

பொய் முகங்கள்

விளையாட்டுக்காக  சினுங்கவைக்கபடும் 
தொட்டச்சினுங்கி போல 
நானும் சினுங்க வைக்கப்படுகிறேன்
பலரால்