isaifm

2/16/2011

கண்ணீர்

சிலநிமிடங்கள் தினமும்
உனக்காக
கவிதை எழுத
நேரம் ஒதுக்கினேன்
ஆனால் -நீயோ
பலநிமிடங்கள் தினமும்
எனக்காக
கண்ணீர் கொடுக்க
நேரம் ஒதுக்கினாய்

love feeling

2/08/2011

எங்கு சென்றாய்


எங்கு சென்றாய் தூரமாக..??? கண் இமைக்கும் நொடியிலும்- உன்னை காணமல் தவிக்கும் தவிப்பும்...நீ எங்கு என்ற ஏக்கமும்,.. மீண்டும் வருவாய் என்ற நம்பிக்கையும் வீணாகுமோ

உன் நினைவுகள்


அன்பே !! உன்னை என் இதயம் என்று சொல்லவா ?என் உயிர் என்று சொல்லவா ? எனக்கு என் இதயமும் உயிரும் ஒன்று தான்., என்னுள் நீ கலந்திருப்பதனால் எப்படி புரியவைப்பேன் ? புரிந்து கொள் பெண்ணே நீ துடிப்பதனால் தான் நான் உயிர் வாழ்கிறேன் !! என்று உன் நினைவுகள் இல்லையோ அமைதியாக தூங்கி கொண்டு இருப்பேன் என் கல்லறையினுள்
உன் நினைவுகளை சுமந்து கொண்டு

என் காதல்


காயங்கள் நெஞ்சம் முழுக்க
மூடும் கண்களுக்குள் கண்ணாடித் தூள்கள்
முட்கள் கொட்டி வைத்த கட்டில்
எங்கிருந்து வரும் உறக்கம்?

காதல்


ஊமையின் கனவு போல ஆனதே என் காதல்

என் காதல்


கருவறையில் இருக்கும் குழந்தை
பத்து மாதம் வரை வளரும்
என் இதயத்தில் இருக்கும் காதல்
என் இதயம் இறக்கும் வரை வளரும்