நான் ஒரு பொம்மையா?
எனக்கு உயிர் இல்லையா?
உணர்வுகள் இல்லையா?
கனவுகள் இல்லையா?
ஆசைகள் இல்லையா?
வலிகள் இல்லையா? அல்லது
எனக்கு இதயமே இல்லை என்று
எண்ணி விட்டாயா என் அன்பே ?
நீ பேசும் மொழியில் அன்று
எனக்கு அர்த்தம் புரியவில்லை
இன்று உன் மௌனம் கூட எனக்கு
இலக்கியம் ஆகிவிட்டது