isaifm

5/28/2010

தனிமை

மரங்கள்
செறிந்த சாலையில்,
மௌனமாக நான்,
இலையுதிர் காலத்து
மரங்களுக்கு
இது ஒரு
ஆறுதலாய்
இருக்குமென…

கவிதை

பிரபஞ்சத்திலிருந்து தெறித்த
நெருப்புப்பொறி பூமியாகும்போது,
காதலுக்கான கவிதை
எங்கிருந்து வந்தாலென்ன?

5/26/2010

kathal

வராத வார்த்தைகளுக்காய்
தனிமை தவமிருக்கிறேன்!
உனக்கான கவிதை
என்னிடமில்லை!

என் கவிதைகள்

வாசிக்க கற்றுக்கொள்,
உனக்கென
எழுதிய
கவிதைகளை!
என்னைத்தான்
பிடிக்கவில்லை,
என்றாவது
ஒருநாள்
என் கவிதைகள்
உனக்கு பிடிக்கக்கூடும்!

5/23/2010

நினைவுகள்


என்னால் ஒன்றும் நினைக்க முடியவில்லை
நீயே என் நினைவாக இருப்பதால்
நிலவை பார்க்க முடிவதில்லை
உன் முகமாய் அது தெரிவதனால்
நட்சத்திரங்களை காணமுடிவதில்லை
உன் நயனங்களை அது ஞாபகப்படுத்துவதனால்

5/18/2010

MOBILA MOBILA

காதல்

அடுத்த சூரிய
அஸ்தமிப்பிலாவது
எனை காதலிக்கிறேன்
என பொய் சொல்
மரணமாவது
எனை நிரந்தரமாய்
ஆவேசப்படுத்த

சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே....

love me

அன்பு

எனக்கே எனக்கான உன் அன்பு அனைத்தையும்
உன் மனதினுள்ளில் மறைத்தாய்
உன் மனசிறையில்
என்னை அடைத்துவிட்டு மறந்துவிட்டது
போல் நடித்தாய் நதியைப்போல் நடந்தாய்
என் நினைவு அணைதடுத்தும் நீ கடந்தாய்
உன் அன்பை என்னிடம் சொல்ல
உன் மனதிற்குதடையும் விதித்தாய்
இன்று உனக்கே உனக்கான என்
அன்புக்கடலில் வந்து கலந்தாய்
உன்னைப் போல் இல்லை உன் மனது
உன்னை ஏமாற்றி உன் உண்மையை சொல்லிவிட்டது..!! 

கண்ணீர்

என் கண்களை
ஈரமாக்கிய
உன் இதயத்தில்
எப்படி ஈரம்
இருக்கும் 

Tendral Varum

எனக்கு பிடித்த பாடல்

நினைவுகள்

என்னால் ஒன்றும் நினைக்க முடியவில்லை நீயே என் நினைவாக இருப்பதால் நிலவை பார்க்க முடிவதில்லை உன் முகமாய் அது தெரிவதனால் நட்சத்திரங்களை காணமுடிவதில்லை உன் நயனங்களை அது ஞாபகப்படுத்துவதனால்